என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
திரைப்படங்களுக்கு டைட்டில் கார்டு மிக முக்கியமானது. சினிமா தொடங்கிய காலத்திலேயே இந்தமுறை வந்துவிட்டது. பழைய கருப்பு வெள்ளை படங்களில் டைட்டில் கார்டு மிக பெரியதாக இருக்கும். எல்லா நடிகர் நடிகைளின் பெயர் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரும் இடம்பெறும். டைட்டிலை நீளமாக வைத்ததற்கு இன்னொரு காரணம் தாமதமாக படம் பார்க்க வருகிறவர்களுக்கு கொஞ்ச கால அவகாசம் கிடைக்கும்.
இந்த நிலையை மாற்றி நடிகர், நடிகைகளின் பெயர் டைட்டிலில் இல்லாமல் வெளிவந்த முதல் படம் 'பார்த்தால் பசி தீரும்'. நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை மட்டும் காட்டி 'உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்' என்று முடித்துக் கொள்ளப்பட்டது டைட்டில். இந்த ஸ்டைல் பின்னர் பல படங்களில் பின்பற்றப்பட்டது.
'பார்த்தால் பசி தீரும்' படத்தில் சிவாஜிக்கும், ஜெமினி கணேசனுக்கும் சம அளவிலான பங்கு இருக்கும், இதனால் யார் பெயரை முதலில் போடுவது என்ற சர்ச்சை உருவானதால் இந்த முறை பின்பற்றப்பட்டதாகவும் சொல்வார்கள்.