அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன் | பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் |
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாகம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பிரமாண்டமாக நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த இசை வெளியீடு விழாவில் படக்குழுவினர் மட்டுமன்றி உலக சினிமாவில் உள்ள பல பிரபலங்களையும் கலந்து கொள்ள வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.