இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
1950களில் புகழ்பெற்ற நாடகங்கள் திரைப்படமாவது ஒரு டிரண்டாக இருந்தது. அப்படி திரைப்படமாக உருவான ஒரு நாடகம் 'என் தங்கை'. டி.எஸ்.நடராஜன் என்பவர் எழுதிய இந்த நாடகம் அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது. கண்பார்வை இல்லாத தன் தங்கைக்காக அண்ணன் செய்யும் தியாகங்கள்தான் கதை. இந்த நாடகத்தில் அண்ணன் கேரக்டரில் சிவாஜி நடித்தார்.
இந்த நாடகம் 1952ம் ஆண்டு திரைப்படமாக தயாரானபோது அதே அண்ணன் கேரக்டரில் நடித்தது எம்ஜிஆர். அவருடன் பி.வி.நரசிம்ம பாரதி, மாதுரிதேவி, பி.எஸ்.கோவிந்தன், எம்.ஜி.சக்ரபாணி, ஈ.வி.சரோஜா மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோரும் நடித்தார்கள்.
நாராயணமூர்த்தி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்தார். பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு 'சோட்டி பெஹன்' என்ற பெயரில் ஹிந்தியிலும், 'ஆட பாடுச்சு' என்ற பெயரில் தெலுங்கிலும், 'ஒன்டே பால்யா ஹோகலு' என்ற பெயரில் கன்னடத்திலும், 'புனீர் மிலனா' என்ற பெயரிலும் ஒடிசாவில் ரீமேக் ஆனது.