கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
வேகமாக வளர்ந்து வரும் பாடலாசிரியர் அருண் பாரதி. ‛அண்ணாத்த' படத்திற்கு இவர் எழுதிய ‛வா சாமி' பாடல் சமீபத்திய ஹிட் பாடல். இப்போது ப்ரீச்சர் நவம்பர் 18 என்ற மலையாள படம் ஒன்றுக்கு பாடல் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மாநிலம் கடந்து நம் தமிழ் மொழியின் பெருமையை கொண்டு செல்வதில் நானும் ஒரு கருவியாக இருக்கிறேன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன் , எழுதும் போது இயக்குநர் மனோஜ் கே வர்க்கீஸ், இசையமைப்பாளர் சுனில்குமார் ஆகியோர் வரிகளில் உள்ள சப்தத்தையும், அர்த்தத்தையும் உணர்ந்து வியந்து பாராட்டினார்கள். அதற்கு நான் நீங்கள் பாராட்ட வேண்டியது என்னையல்ல தமிழ் மொழியை என்று அவர்களுக்கு பதிலளித்தேன்.
இக்கதை கேரளம் மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் நடைபெறும் கதையாக இருப்பதால் முழுக்க முழுக்க தமிழிலேயே இப்பாடலை எழுதியுள்ளேன். எனது சூழலியல் குறித்த " ஈமக்கலயம் " என்னும் கவிதை கேரள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு 12ம்வகுப்பு சிறப்புத்தமிழ் நூலில் மாணவர்களுக்கு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. இது ஒரு தமிழ் கவிஞனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் . என்றார்.