புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள 'புஷ்பா' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இருவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ள இப்படத்திற்கு முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியானதால் ஒவ்வொரு மொழியிலும் வெளியீட்டிற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்கள்.
மும்பை, பெங்களூரூ, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் மொழிக்கு ஒன்றாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அவை அனைத்திலும் ராஷ்மிகா தவறாமல் கலந்து கொண்டார். அதேசமயம், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
படத்தில் ராஷ்மிகாவிற்கும் பெரிய அளவில் பாராட்டுக்கள் வரவில்லை. கடைசி நேரத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலைச் சேர்த்தார்கள். அந்தப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய ஹிட் ஆகிவிட்டது. சமந்தா அலையில் ராஷ்மிகாவின் பெயர் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.