‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
நடிகர் அர்ஜூன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் அர்ஜூன்(57). ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் அர்ஜூன் பங்கேற்று தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். சான்சிபார் தீவில் நடந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நிறைவடைந்தது. நிகழ்ச்சியை முடித்து திரும்பிய அர்ஜூனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுப்பற்றி அர்ஜூன் கூறுகையில், ‛‛கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன்தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.