ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நடிகர் அர்ஜூன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் அர்ஜூன்(57). ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் அர்ஜூன் பங்கேற்று தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். சான்சிபார் தீவில் நடந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நிறைவடைந்தது. நிகழ்ச்சியை முடித்து திரும்பிய அர்ஜூனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுப்பற்றி அர்ஜூன் கூறுகையில், ‛‛கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன்தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.




