மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் |
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படம் கடும் சர்ச்சைகளை சந்தித்தது. அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை தொடர்ந்து பாலா, வெற்றிமாறன், சிவா என மூன்று இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் சூர்யா.
இவற்றில் சூர்யா நடிப்பில் ஏற்கனவே நந்தா, பிதாமகன் படங்களை இயக்கி உள்ள பாலா சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்திற்கான கதை பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதால் கூடிய சீக்கிரமே படப்பிடிப்பை துவங்கி விடுவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் அடுத்தபடியாக பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஓய்விற்காக குடும்பத்துடன் சூர்யா துபாய் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அவர் துபாயில் இருந்து திரும்பியதும் பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.