ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படம் கடும் சர்ச்சைகளை சந்தித்தது. அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை தொடர்ந்து பாலா, வெற்றிமாறன், சிவா என மூன்று இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் சூர்யா.
இவற்றில் சூர்யா நடிப்பில் ஏற்கனவே நந்தா, பிதாமகன் படங்களை இயக்கி உள்ள பாலா சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்திற்கான கதை பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதால் கூடிய சீக்கிரமே படப்பிடிப்பை துவங்கி விடுவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் அடுத்தபடியாக பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஓய்விற்காக குடும்பத்துடன் சூர்யா துபாய் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அவர் துபாயில் இருந்து திரும்பியதும் பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.