சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் | பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் |
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இதுவரை பெரும்பாலும் மாடர்ன் பெண் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ராஷ்மிகா இந்தப்படத்தில் மலைவாழ் கிராமத்து பெண்ணாக ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் இவர் தமிழ், தெலுங்கு இரண்டும் கலந்த சித்தூர் பாஷை பேசும் பெண்ணாக நடித்துள்ளார். கன்னடத்தை சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கிலும் தனது படங்களுக்கு தானே டப்பிங் பேசி வரும் ராஷ்மிகா, இந்த படத்திற்காக சித்தூர் பாஷையை கற்று கொண்டு பேசியுள்ளார். இதற்காக தனி ஆசிரியர் ஒருவரை நியமித்து பயிற்சி எடுத்துக்கொண்டாராம் ராஷ்மிகா.
இதுபற்றி ராஷ்மிகா கூறும்போது, “பல மொழிகளில் நடிக்கிறேன் என்பதால் கிட்டத்தட்ட எனக்கு ஆறு மொழிகள் பேச தெரியும்.. ஆனால் இந்த சித்தூர் பாஷையை பேச நான் ரொம்பவே சிரமப்பட்டேன். ஆனால் தினசரி நான்கு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இறுதியில் ரிசல்ட் ரொம்பவே திருப்திகரமாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.