கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்துஜா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் ‛‛வாழ்க்கை முடிந்தது இனிமேல் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார். வேதனை இன்றி விடியல் இல்லை'' தெரிவித்து இருந்தார் செல்வராகவன்.
இதற்கு இயக்குனர் சேரன் பதில் கொடுத்திருந்தார். அதில், ‛‛சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதராக இருப்போம். சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம் வாருங்கள். உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப் போலவே செல்வா...'' என கூறியிருந்தார்.
அதற்கு நன்றி கூறி உள்ளார் செல்வராகவன். அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார். தங்களின் ஆட்டோகிராப் உட்பட பல படங்கள் எங்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்திருக்கின்றன. தங்களின் படங்களை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவன் என கூறியுள்ளார்.