ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்துஜா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் ‛‛வாழ்க்கை முடிந்தது இனிமேல் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார். வேதனை இன்றி விடியல் இல்லை'' தெரிவித்து இருந்தார் செல்வராகவன்.
இதற்கு இயக்குனர் சேரன் பதில் கொடுத்திருந்தார். அதில், ‛‛சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதராக இருப்போம். சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம் வாருங்கள். உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப் போலவே செல்வா...'' என கூறியிருந்தார்.
அதற்கு நன்றி கூறி உள்ளார் செல்வராகவன். அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார். தங்களின் ஆட்டோகிராப் உட்பட பல படங்கள் எங்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்திருக்கின்றன. தங்களின் படங்களை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவன் என கூறியுள்ளார்.




