ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் |
'ஒத்த செருப்பு' படத்திற்குப் பிறகு தமிழில் பார்த்திபன் இயக்கி வரும் படம் 'இரவின் நிழல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. 20 வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து பணி புரிவதாக அறிவிக்கப்பட்ட 'ஏலேலோ' படம் நடக்காமல் போய்விட்டது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பார்த்திபன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அது குறித்து பார்த்திபன் டுவிட்டரில், “இரவின் நிழல்' - ஏ.ஆர்.ரஹ்மான் இசை ம்யூரல்! பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது.
சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு(திரைக்கு)வரும்போது ருசிக்கும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
'ஒத்த செருப்பு' படம் போலவே ஒரு புதுமையான முயற்சியில் இந்த 'இரவின் நிழல்' படத்தைப் பார்த்திபன் எடுத்து வருவதாகத் தெரிகிறது.