தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திருமண உறவு பிரிவுக்குப் பின் பல புதிய படங்களில் நடிக்க அடுத்தடுத்து சம்மதித்து வருகிறார். தற்போது சர்வதேச அளவில் தயாராக உள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் சம்மதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்பது படத்தின் பெயராம். பிலிப் ஜான் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார்.
திமெரி என்-முராரி என்ற இந்திய எழுத்தாளர் எழுதியுள்ள நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாம். இருபால் சேர்க்கை உணர்வு கொண்டு ஒரு தமிழ்ப் பெண்ணாக சமந்தா இப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.
'த பேமிலி மேன் 2' இணையத் தொடருக்குப் பிறகு சமந்தாவைத் தேடி நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சர்வதே அளவில் உருவாக உள்ள படத்தில் அவர் நடிக்க இருப்பதற்கான வாய்ப்பும் கிடைக்க அந்த இணையத் தொடர்தான் காரணம் என்கிறார்கள்.
இது பற்றிய அமெரிக்க இணையதள செய்தி ஒன்றைப் பகிர்ந்து, “முற்றிலும் புதியதொரு உலகம்” என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து சமந்தா, “'அரெஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' படத்தில் இடம் பெறுவதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. அனு-வாக இருப்பதற்கு என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி பிலிப் ஜான் சார். இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.