ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திருமண உறவு பிரிவுக்குப் பின் பல புதிய படங்களில் நடிக்க அடுத்தடுத்து சம்மதித்து வருகிறார். தற்போது சர்வதேச அளவில் தயாராக உள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் சம்மதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்பது படத்தின் பெயராம். பிலிப் ஜான் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார்.
திமெரி என்-முராரி என்ற இந்திய எழுத்தாளர் எழுதியுள்ள நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாம். இருபால் சேர்க்கை உணர்வு கொண்டு ஒரு தமிழ்ப் பெண்ணாக சமந்தா இப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.
'த பேமிலி மேன் 2' இணையத் தொடருக்குப் பிறகு சமந்தாவைத் தேடி நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சர்வதே அளவில் உருவாக உள்ள படத்தில் அவர் நடிக்க இருப்பதற்கான வாய்ப்பும் கிடைக்க அந்த இணையத் தொடர்தான் காரணம் என்கிறார்கள்.
இது பற்றிய அமெரிக்க இணையதள செய்தி ஒன்றைப் பகிர்ந்து, “முற்றிலும் புதியதொரு உலகம்” என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து சமந்தா, “'அரெஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' படத்தில் இடம் பெறுவதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. அனு-வாக இருப்பதற்கு என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி பிலிப் ஜான் சார். இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.