அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளவம் வாங்கும் நடிகை நயன்தாரா தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன. தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 5 கோடி வரை சம்பளமாக வாங்குவதாகச் சொல்கிறார்கள். மற்ற முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட இது இரு மடங்கு அதிகமும் என்பது கூடுதல் தகவல். தெலுங்கில் நயன்தாரா தற்போது சிரஞ்சீவி நடிக்கும் 'காட்பாதர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக நயன்தாராவிற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள 'லூசிபர்' படத்தின் ரீமேக் தான் இந்த 'காட்பாதர்'. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார். படம் முழுவதும் இடம் பெறாத குறைவான காட்சிகள் கொண்ட கதாபாத்திரம்தான். இருந்தாலும் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என சிரஞ்சீவி சொன்னதாக டோலிவுட்டில் தகவல் உண்டு. அதனால்தான் இவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறார்களாம்.
தெலுங்கில் ஒரு படத்திற்காக ஒரு கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச சம்பளம் இது என்கிறார்கள்.