32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய்குமார், காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்து நவம்பர் 5ல் வெளியான ஹிந்திப் படம் 'சூர்யவன்ஷி'. அஜய் தேவகன், ரன்வீர் சிங் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா காரமணமாக மூடப்பட்ட தியேட்டர்களை மகாராஷ்டிராவில் ஒரு மாதத்திற்கு முன்புதான் தியேட்டர்களைத் திறந்தார்கள்.
அதற்கடுத்த இரண்டு வாரங்களில் வெளிவந்த 'சூர்யவன்ஷி' படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரண்டு வந்தது பாலிவுட்டில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்படம் இந்தியாவில் மட்டும 166 கோடியே 23 லட்சம் வசூலித்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பாலிவுட்டில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் முறையாக 100 கோடியைக் கடந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதுமான வசூல் 250 கோடியைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.