தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய அண்ணாத்த, ஜெய்பீம், எனிமி மற்றும் சாம்ஸின் ஆபரேஷன் ஜுஜுபி என நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜெய் பீம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே ஒடிடியில் வெளியாகி விட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த நான்கு படங்களில் ஆபரேஷன் ஜுஜுபி தவிர்த்து மற்ற மூன்று படங்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக கடந்த வருடத்தில் அவர் நடித்த பாவ கதைகள் என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானது. அதுவும் ஆந்தாலாஜி படம் தான்.. ஆனால் இப்படி ஒரு பண்டிகை ரிலீஸில் ஒரேசமயத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாவது அவரது திரையுலக பயணத்தில் இதுதான் முதன்முறை.
அதுமட்டுமல்ல, தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு மெயின் வில்லனாக பல படங்களில் நடித்திருந்த பிரகாஷ்ராஜ், இத்தனை வருடங்களில் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் ரெண்டு நிமிடம் மட்டுமே வந்துபோகும் சாதாரண கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து தற்போது அவருக்கு வில்லனாக நடித்து அந்த குறையையும் தீர்த்து விட்டார்.
அதேபோல சூர்யாவுடன் சிங்கம் படத்திலும் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் இதற்குமுன் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தாலும் கூட 11 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவருடனும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.
பிரகாஷ்ராஜின் நடிப்பை ரசிப்பதற்கென்றே உள்ள ஒரு ரசிகர் கூட்டம் “இந்த தீபாவளி முத்துப்பாண்டி கோட்டை டா” என சோஷியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.