‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியாமணி, 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்துவரும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து இன்ஸ்டாகிரமில் கூறியுள்ளார். ‛வாழ்க்கை மிகவும் சிறியது. சிரியுங்கள். புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளுங்கள். பிறர் செய்யும் தவறுகளை மன்னித்துவிடுங்கள். சந்தோஷமாக இருங்கள்' என்றுக் கூறி தனது புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.