‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியாமணி, 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்துவரும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து இன்ஸ்டாகிரமில் கூறியுள்ளார். ‛வாழ்க்கை மிகவும் சிறியது. சிரியுங்கள். புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளுங்கள். பிறர் செய்யும் தவறுகளை மன்னித்துவிடுங்கள். சந்தோஷமாக இருங்கள்' என்றுக் கூறி தனது புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.




