‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 2019ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் கொரானாவால் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வெளியான பர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்துள்ள விஷ்ணு விஷால், இது தவறான செய்தி. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் எப்போதுமே சொல்வது, இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறோம். திரையரங்கில் படம் பார்த்தால்தான் படம் பார்த்த உணர்வு இருக்கும் என்று கூறியுள்ளார்.




