கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 2019ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் கொரானாவால் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வெளியான பர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்துள்ள விஷ்ணு விஷால், இது தவறான செய்தி. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் எப்போதுமே சொல்வது, இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறோம். திரையரங்கில் படம் பார்த்தால்தான் படம் பார்த்த உணர்வு இருக்கும் என்று கூறியுள்ளார்.