திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்தை தனது பேரன்களுடன் சமீபத்தில் பார்த்தார் ரஜினிகாந்த். அது பற்றியும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் ''அண்ணாத்த' படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த், சிவா இணைய் வேண்டும்” என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “அண்ணாத்த'' படத்துல நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கலை சிவா சார், ஆனா, நான் பார்த்துட்டேன். படம் பார்த்துட்டு நான் வெளிய வந்து, உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல தண்ணியோட நீங்க பண்ணது மேஜிக் இல்லை, அதுக்கு என்ன சொல்லணும்னே தெரியலை. தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாவும், அப்பாவோட மகளாவும் நீங்க அப்பாவை பார்த்துக்கிட்ட முறைய வச்சி, கண்ணடிப்பா, நீங்க, அப்பா, உங்க மொத்த குழு 'அண்ணாத்த' படத்துக்கப்புறம் திரும்பவும் வேலை பார்க்கணும் சார்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மகளின் ஆசையை ரஜினிகாந்தும், இயக்குனர் சிவாவும் நிறைவேற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.