பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரெட்டி, மூன்றாம் உலக தீவில் பிச்சைக்காரர்களை விட மோசமான நிலையில் இருந்ததாக கூறியுள்ளார்.
ஜீ தமிழில் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவரில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு போட்டியிட்டு வருகின்றனர். சர்வைவர் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகி வெளியில் வரும் அனைவருமே ஏதோ ஒரு சோக கீதத்தை பாடி வருகின்றனர். அந்த வகையில் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆன காயத்ரி ரெட்டி, நீண்ட நாட்களாக மூன்றாம் உலக தீவில் இருந்தார். அதிக நாட்கள் மூன்றாம் உலகத் தீவில் இருந்த ஒரே நபர் காயத்ரி தான்.
இந்நிலையில் அங்கு அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து தற்போது பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், 'சர்வைவர் நிகழ்ச்சியில் மூன்றாம் உலகத் தீவில் நான் சில கஷ்டங்களை அனுபவித்தாலும் அந்த இடத்தை, உப்பில்லாத உணவை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன். மற்ற போட்டியாளர்களுடன் இருந்திருந்தால் இந்த அளவிற்கு கஷ்டங்கள் தெரிந்திருக்காது. மூன்றாம் உலகத் தீவில் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். அங்கு உணவில்லாது தவிப்பது மிகவும் மோசமான விஷயம். அது பிச்சை எடுப்பதை விட கஷ்டமாக இருந்தது. ஒருமுறை நான் இன்னொருவர் சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவை கூட சாப்பிட்டேன்' என்ற அதிர்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டார்.