பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி படம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உதயநிதியை சந்தித்த பிறகு இது தொடர்பாக உதய நிதி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனது நெஞ்சுக்கு நீதி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ரசூல் இருவரும் என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். என்று எழுதியுள்ளார்.