துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி படம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உதயநிதியை சந்தித்த பிறகு இது தொடர்பாக உதய நிதி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனது நெஞ்சுக்கு நீதி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ரசூல் இருவரும் என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். என்று எழுதியுள்ளார்.