காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி படம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உதயநிதியை சந்தித்த பிறகு இது தொடர்பாக உதய நிதி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனது நெஞ்சுக்கு நீதி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ரசூல் இருவரும் என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். என்று எழுதியுள்ளார்.