பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அரசியலில் இருந்து ரஜினி விலகிக் கொண்ட நிலையில் விஜய்க்கு அரசியல் ஆசை அதிகரித்திருப்பதாக வெளிவரும் தகவல்களை உறுதி செய்வது போல அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி வருகிறது. அரசியலில் இறங்கினால் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடலாம் என்று விஜய் பச்சைக்கொடி காட்டினார்.
இதனால் இந்த தேர்ததலில் பல்வேறு பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் உற்சாகம் அடைந்துள்ளனார். நேற்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ரகசியமாக நடந்தது.
வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு விஜய் சால்வை அணிவித்து வாழ்த்தினார். கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் எதுவும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. மக்களுக்காக நன்றாக உழைத்து, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று விஜய் பேசியதாக தெரிகிறது.