தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். டில்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விருது வழங்கி கவுரவித்தார்.
‛‛இந்த விருதை தனது குருநாதர் கே.பாலசந்தர், சகோதரர் சத்யநாராயணன், நண்பர் ராஜ் பகதூர் மற்றும் திரைத்துரையை சார்ந்த அனைத்து கலைஞர்கள், ரசிகர்களுக்கும், தன்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விருதை பெற்ற பிறகு டில்லியில் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ரஜினிகாந்த். இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
விருதுகளுடன் மாமனார் - மருமகன்
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினி, தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார். ஒரேநேரத்தில் ஒரே விழாவில் மாமனார் ரஜினியும், மருமகன் தனுஷூம் விருது பெற்றனர். இவர்கள் இருவரும் விருதுகளுடன் போஸ் கொடுத்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.