புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
குற்றம் 23 படத்திற்கு பிறகு அறிவழகனும், அருண் விஜயும் இணைந்துள்ள படம் பார்டர். ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வெளியீட்டக்கு தயாராகி விட்டது. நவம்பர் 19ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் திருப்திகரமாக முடிந்தமைக்காக அருண் விஜய் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டவர்களுக்கு ஐ பேட் பரிசளித்துள்ளார்.
படம் குறித்து அருண் விஜய் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இது படத்தில் உங்கள் அற்புதமான பணிக்கான ஒரு அன்பின் அடையாளம். இந்த அற்புதமான கதையை என்னிடம் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநர் அறிவழகனுக்கு நன்றிகள். இந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்த ஆல் இன் பிக்சர்ஸுக்கும் நன்றி. பார்டர் என்னுடைய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும், என் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாகவும் இருக்கும். என்று எழுதியிருக்கிறார்.