பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சென்னை எழும்பூர் அருகே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பார்வையிட்டார். அவரது பேட்டி:'போலீஸ் மியூசியம்' என்றால் அதில் என்ன; எப்படி இருக்கும் என்ற ஆசை இருந்தது. நான் காக்கிச் சட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தார். அதனால், போலீஸ் மீது தனி ஈர்ப்பு உண்டு. நம்மூரில் போலீஸ் துறை ஆரம்பத்தில் இருந்து, அதன் பரிமாணம் எப்படி வளர்ந்தது என்பதை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். அதிலும், அதை விளக்கியது அருமை.
தெரிந்த விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னும் ஒரு கதை உண்டு.போலீசாக நினைப்பவர்கள், போலீசால் கவரப்பட்டவர்கள் அனைவரும், இந்த மீயூசியத்தை காண வேண்டும். அதுமட்டுமின்றி, போலீசாக எப்படியெல்லாம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறியலாம்.காவல் துறை மற்றும் சிறைத்துறை பற்றி, இங்கு அருமையாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவிலே சிறந்த இடம் என்பதை, இதை பார்த்த போது புரிந்தது. குழந்தைகளை கண்டிப்பாக அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.




