சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடனான தனது திருமண முறிவு குறித்த செய்தியை வெளியிட்ட சமந்தா தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் பிசியாகி விட்டார். தசரா பண்டிகையை முன்னிட்டு மிக முக்கியமானவர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றும் இன்றும் என அடுத்தடுத்து சமந்தா நடிக்கவுள்ள இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாக இருக்கின்றன.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார் சமந்தா. இந்தப்படத்தை சாந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் அறிமுக இரட்டை இயக்குனர்களான ஹரிஷ் நாராயணன்-ஹரிசங்கர் இருவரது டைரக்சனில் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி மூவிஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.