பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடனான தனது திருமண முறிவு குறித்த செய்தியை வெளியிட்ட சமந்தா தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் பிசியாகி விட்டார். தசரா பண்டிகையை முன்னிட்டு மிக முக்கியமானவர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றும் இன்றும் என அடுத்தடுத்து சமந்தா நடிக்கவுள்ள இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாக இருக்கின்றன.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார் சமந்தா. இந்தப்படத்தை சாந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் அறிமுக இரட்டை இயக்குனர்களான ஹரிஷ் நாராயணன்-ஹரிசங்கர் இருவரது டைரக்சனில் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி மூவிஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.