லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடனான தனது திருமண முறிவு குறித்த செய்தியை வெளியிட்ட சமந்தா தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் பிசியாகி விட்டார். தசரா பண்டிகையை முன்னிட்டு மிக முக்கியமானவர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றும் இன்றும் என அடுத்தடுத்து சமந்தா நடிக்கவுள்ள இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாக இருக்கின்றன.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார் சமந்தா. இந்தப்படத்தை சாந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் அறிமுக இரட்டை இயக்குனர்களான ஹரிஷ் நாராயணன்-ஹரிசங்கர் இருவரது டைரக்சனில் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி மூவிஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.