புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
லூசிபர் என்கிற படத்தின் மூலம் மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் ஒரு வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானதுடன் மோகன்லாலுக்கு முதல் 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அந்த படம் வெற்றி பெற்ற கையோடு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்கிற பெயரில் உருவாக இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டும் என்பதால் அதை தற்காலிகமாக வைத்து ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது ப்ரோ டாடி என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கியுள்ளார் பிரித்திவிராஜ்.
இந்த படத்தை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளாவில் தற்போதும் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல் இல்லாததால் இந்த ப்ரோ டாடி படமும் ஓடிடியில்தான் ரிலீசாக இருக்கிறது.