சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டதாகஅறிவிக்கப்பட்டது. கடைசிநாள் படப்பிடிப்பு முடிவடைந்து அவர்கள் ஸ்டுடியோவிற்குள் இருந்து வெளியே வரும் வீடியோவைகூட வெளியிட்டிருந்தனர். அதோடு பிக்அப் ஷாட்களை தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
அதனால் அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணும், கொரட்டல்ல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படத்திற்காக படமாக்கப்பட்ட சில காட்சிகளில் தனக்கு திருப்தி இல்லாததால் மீண்டும் அந்த காட்சிகளை படமாக்கப்போகிறாராம் ராஜமவுலி. அதற்காக இன்னும் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகிய இருவருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த வாரத்தில் இந்தபடப்பிடிப்பு நடைபெறுகிறது.