பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டதாகஅறிவிக்கப்பட்டது. கடைசிநாள் படப்பிடிப்பு முடிவடைந்து அவர்கள் ஸ்டுடியோவிற்குள் இருந்து வெளியே வரும் வீடியோவைகூட வெளியிட்டிருந்தனர். அதோடு பிக்அப் ஷாட்களை தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
அதனால் அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணும், கொரட்டல்ல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படத்திற்காக படமாக்கப்பட்ட சில காட்சிகளில் தனக்கு திருப்தி இல்லாததால் மீண்டும் அந்த காட்சிகளை படமாக்கப்போகிறாராம் ராஜமவுலி. அதற்காக இன்னும் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகிய இருவருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த வாரத்தில் இந்தபடப்பிடிப்பு நடைபெறுகிறது.




