புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி. துக்ளக், ரிக்கி, நம் ஏரியய ஒன் தினா, கிரிக் பார்ட்டி உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனராகி உள்ளினதவர கண்டத்தே, கிரிக் பார்ட்டி, ராமராஜுனா உள்பட பல படங்களை இயக்கினார். அவனே ஸ்ரீமன்நாராயணா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.
தற்போது ரிச்சர்ட் அந்தோணி என்ற பேண்டசி திகில் படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். கார்ம் சாவ்லா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தைப் பற்றி ரக்ஷித் ஷெட்டி கூறியதாவது: ரிச்சர்ட் அந்தோணி உலிடவரு கண்டந்தி படத்தின் 2ம் பாகம் என்றும் இதனை சொல்லலாம். அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், இது அதைவிடவும் இன்னும் சுவாரஸ்யமானது, பிரமாண்டமானது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் உலிடவரு கண்டந்தி எழுதும் போது அதற்கு அடுத்த பாகம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எல்லாமே விதிப்படி நடக்கும் என்பதுபோல் இது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் போல.
இந்தக் கதை ஏற்கெனவே இருக்கும் ஒரு கதை. அதற்கான நேரம் வாய்த்தபோது அதை நான் வடித்திருக்கிறேன். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன். இதன் அடுத்த கட்டத்தையும் நான் எழுதுவேன். இந்த உலகம் வாஞ்சையுடன் அதற்கான வாய்ப்பை எனக்கு நல்கும் என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.