மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில், சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற வேண்டும் என்கிற கூக்குரல் அதிகம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது குறிப்பாக தமிழக அரசு சிறிய அளவிலான திரையரங்குகளை கட்டவேண்டும் என்றும், அதில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் அம்மா திரையரங்கம் என்கிற பெயரில் மினி திரையரங்கம் கட்டப்போவதாக கூட கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டது.. ஆனால் அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் தான் இருக்கிறது.
அதேசமயம் கேரளாவிலும், இதேபோன்று சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் மலையாள படங்களை திரையிடுவதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த சில வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கலை பண்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சாஜி செரியன் என்பவர் மலையாள சினிமாவில் தயாராகும் சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்றுவதற்காக, கேரள அரசு சார்பிலேயே ஓடிடி தளம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது என கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் மொத்தம் 700 திரையரங்குகள் தான் இருப்பதால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலை தீர்ப்பதற்காக, அரசே ஓடிடி தளம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.