இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில், சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற வேண்டும் என்கிற கூக்குரல் அதிகம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது குறிப்பாக தமிழக அரசு சிறிய அளவிலான திரையரங்குகளை கட்டவேண்டும் என்றும், அதில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் அம்மா திரையரங்கம் என்கிற பெயரில் மினி திரையரங்கம் கட்டப்போவதாக கூட கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டது.. ஆனால் அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் தான் இருக்கிறது.
அதேசமயம் கேரளாவிலும், இதேபோன்று சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் மலையாள படங்களை திரையிடுவதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த சில வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கலை பண்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சாஜி செரியன் என்பவர் மலையாள சினிமாவில் தயாராகும் சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்றுவதற்காக, கேரள அரசு சார்பிலேயே ஓடிடி தளம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது என கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் மொத்தம் 700 திரையரங்குகள் தான் இருப்பதால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலை தீர்ப்பதற்காக, அரசே ஓடிடி தளம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.