இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல மலையாள இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன். இணையை தேடி, மிருதுளா, ஐஸ்கிரீம், வயல், பின்னர் பம்படா ஞானே உள்பட பல படங்களை இயக்கினார். தமிழில் வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமாகி இருந்த சில்க் ஸ்மிதாவை தனது இணைய தேடி படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகம் செய்தார்.
கொச்சியை சேர்ந்த இவர் சினிமாவில் போட்டோகிராபராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். 75 வயதான அந்தோணி ஈஸ்ட்மேன் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சையில் இருந்த அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.