புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த வருடம் கொரோனா தாக்கம் உருவாவதற்கு முன்பாகவே வேணு உடுகுலா என்பவர் இயக்கத்தில் பீரியட் படமாக தயாராகி விட்டது 'விராட பர்வம்'.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடிக்க, நக்ஸலைட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய்பல்லவி. மேலும் சீனியர்களான பிரியாமணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடித்துள்ள இந்தப்படத்திற்கு, கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைவதற்கு முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்தப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக ஒடிடி தரப்பில் நல்ல விலை தருவதற்கு நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதனால் இந்தப்படம் கூடிய விரைவில் ஒடிடியில் வெளியாகலாம் என்றும் ஒரு செய்தி கடந்த நாட்களாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா, விராட பர்வம்' படம் ஒடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை. நிலைமை ஓரளவு சீரானதும், நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார்.