சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கடந்த வருடம் கொரோனா தாக்கம் உருவாவதற்கு முன்பாகவே வேணு உடுகுலா என்பவர் இயக்கத்தில் பீரியட் படமாக தயாராகி விட்டது 'விராட பர்வம்'.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடிக்க, நக்ஸலைட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய்பல்லவி. மேலும் சீனியர்களான பிரியாமணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடித்துள்ள இந்தப்படத்திற்கு, கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைவதற்கு முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்தப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக ஒடிடி தரப்பில் நல்ல விலை தருவதற்கு நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதனால் இந்தப்படம் கூடிய விரைவில் ஒடிடியில் வெளியாகலாம் என்றும் ஒரு செய்தி கடந்த நாட்களாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா, விராட பர்வம்' படம் ஒடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை. நிலைமை ஓரளவு சீரானதும், நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார்.