புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த 2018ல் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் ஒடியன் என்கிற படத்தை இயக்கியவர் விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன். மிகப்பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் அந்தப்படத்தை மிகப்பெரிய தோல்விப்படமாக தந்து, மோகன்லால் ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளானார். அதை தொடர்ந்து சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மோகன்லாலை வைத்து மகாபாரத பீமன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்க, பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பண மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் நேற்று. கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீகுமார் மேனன். இந்த தகவல் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவல்சம் என்கிற நிதி நிறுவனத்திடம் பட தயாரிப்புக்காக ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிய ஸ்ரீகுமார், அதன்பின் அந்த நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. முறையான பதிலும் சொல்லவில்லை.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக அவர் விண்ணப்பித்த முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது..