அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் |
நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'வைல்டு டாக்' என்கிற படம் இன்று(ஏப்., 2) வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனரான சாலமன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அண்டர் கவர் ஆபரேஷனை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா ஏசிபி விஜய் வர்மா என்கிற ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்தனை வருடங்கள் சினி பீல்டில் இருந்தாலும் இப்போதும் அவருக்கு முதல் படம் ரிலீசாவது போலவே பதட்டம் ஏற்பட்டு விடுகிறதாம்.
இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் நாகார்ஜுனா.. அவருக்கு விதவிதமான உணவு வகைகளை தன் கையாலேயே சமைத்து சாப்பிட வைத்த சிரஞ்சீவி, கலகலப்பாக பேசி நாகார்ஜுனாவின் டென்சனை போக்கி, அவரை கூல் பண்ணி அனுப்பி வைத்துள்ளார். சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து, அவர் மனைவி சுரேகா தங்கள் இருவரையும் இணைத்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நாகார்ஜுனா.