கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
கொரோனா தாக்கம் ஆரம்பமான சில மாதங்களில் நடிகர் பஹத் பாசில் மட்டும் இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஒன்றிணைந்து மொபைல் போனிலேயே முழுக்க முழுக்க 'சீ யூ சூன்' என்கிற படத்தை தயாரித்து, நடித்து அதை ஓடிடி தளத்தில் வெளியிட்டு நல்ல வசூலும் பார்த்துவிட்டார்.
அதையடுத்து கொரோனா தாக்கம் நீங்கியிராத நிலையில் கடந்த செப்டம்பர் மாதமே மீண்டும் 'இருள்' என்கிற படத்தின் படப்பிடிப்பையும் கேரளாவில் வாகாமன் பகுதியில் துவங்கியவர், இதோ இன்று அந்தப்படத்தை ரிலீஸும் செய்துவிட்டார்.. வழக்கம்போல இதுவும் ஒடிடி (நெட்பிளிக்ஸ்) தளத்தில் தான் வெளியாகியுள்ளது.
இதில் இன்னொரு ஆச்சர்யமாக மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற ஹிட் படம் மூலமாக சரிந்துகிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய இயக்குனர் திலீஷ் போத்தனுடன் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள 'ஜோஜி' படத்தையும் முடித்து இன்று அதன் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தபடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்து (ஏப்-7) ரிலீசாகிறது. இதையும் ஒடிடி (அமேசான் பிரைம்) தளத்திலேயே ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது கேரளாவில் மலையாள படங்கள் தியேட்டர்களிலேயே வெளியாகி வரும் சூழலில், பஹத் பாசிலுக்கு மட்டும் தியேட்டர் பக்கமே வர விருப்பம் இல்லை போல தெரிகிறது.