காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி |
கொரோனா தாக்கம் ஆரம்பமான சில மாதங்களில் நடிகர் பஹத் பாசில் மட்டும் இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஒன்றிணைந்து மொபைல் போனிலேயே முழுக்க முழுக்க 'சீ யூ சூன்' என்கிற படத்தை தயாரித்து, நடித்து அதை ஓடிடி தளத்தில் வெளியிட்டு நல்ல வசூலும் பார்த்துவிட்டார்.
அதையடுத்து கொரோனா தாக்கம் நீங்கியிராத நிலையில் கடந்த செப்டம்பர் மாதமே மீண்டும் 'இருள்' என்கிற படத்தின் படப்பிடிப்பையும் கேரளாவில் வாகாமன் பகுதியில் துவங்கியவர், இதோ இன்று அந்தப்படத்தை ரிலீஸும் செய்துவிட்டார்.. வழக்கம்போல இதுவும் ஒடிடி (நெட்பிளிக்ஸ்) தளத்தில் தான் வெளியாகியுள்ளது.
இதில் இன்னொரு ஆச்சர்யமாக மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற ஹிட் படம் மூலமாக சரிந்துகிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய இயக்குனர் திலீஷ் போத்தனுடன் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள 'ஜோஜி' படத்தையும் முடித்து இன்று அதன் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தபடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்து (ஏப்-7) ரிலீசாகிறது. இதையும் ஒடிடி (அமேசான் பிரைம்) தளத்திலேயே ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது கேரளாவில் மலையாள படங்கள் தியேட்டர்களிலேயே வெளியாகி வரும் சூழலில், பஹத் பாசிலுக்கு மட்டும் தியேட்டர் பக்கமே வர விருப்பம் இல்லை போல தெரிகிறது.