இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் கேரளாவில் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த ஜனவரி மாதமே திறக்கப்பட்டாலும் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டன. இரவுக்காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் மோகன்லால் கூட தனது த்ரிஷ்யம்-2 படத்தை ஓடிடி தளத்தில் தான் ரிலீஸ் செய்தார். இந்தநிலையில் நேற்று முதல் (மார்ச்-11) இரவுக்காட்சியையும் சேர்த்து நான்கு காட்சிகளை திரையிட்டுக்கொள்ள கேரள அரசு அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து நேற்று முதல் படமாக மம்முட்டி நடித்த 'தி பிரைஸ்ட்' என்கிற படம் தியேட்டர்களில் வெளியானது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு, நீண்ட நாட்கள் கழித்து, தியேட்டர் அதிபர்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கும் விதமாக பல இடங்களில் பல காட்சிகளுக்கு ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் நிறைய பார்க்க முடிந்தது.
மர்ம த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து முதன்முதலாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார் என்பதும் தியேட்டர்களுக்கு அதிகம் ரசிகர்கள் வர காரணமாக அமைந்தது என்று தியேட்டர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.