ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
சமீபத்தில் கேரளாவில் சையத் முஸ்தாக் அலி ட்ராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கேரள அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற டி-20 கிரிக்கெட் போட்டியில் கேரள அணியை சேர்ந்த முகமது அசாருதீன் என்கிற இளம் கிரிக்கெட் வீரர் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இவர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது நடிகர் நிவின்பாலி இவருக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
முகமது அசாருதீனின் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிவின்பாலி, இது குறித்து கூறும்போது, “என்ன ஒரு அடி அசாருதீன்....!! வாழ்த்துக்கள் பிரதர்” என கூறியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான 1983 என்கிற படத்தில் கிராமத்து கிரிக்கெட் வீரராக நிவின்பாலி நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.