டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழக திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என முதலில் தமிழக அரசு தளர்வுகளை அளித்தது. ஆனால் மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் எச்சரிக்கை காரணமாக மீண்டும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, ரசிகர் காட்சிகள் என்கிற பெயரில் ஒருநாளைக்கு ஆறு காட்சிகள் வரை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் நிலைமை இப்படி இருக்க, இன்று(ஜன., 13) முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள கேரளாவிலோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அங்கே 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதுடன், தியேட்டர்களில் இரவுக்காட்சி (9.30மணி காட்சி) திரையிடக்கூடாது என புது உத்தரவையும் பிறப்பித்துள்ளனர். விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளை திறக்க நினைத்த உரிமையாளர்களுக்கு இது அதிர்ச்சி அளித்தாலும், அதற்கு பதிலாக முன்கூட்டியே காலை காட்சி ஒன்றை திரையிட்டு சமாளிக்க முடிவெடுத்து உள்ளார்களாம்..




