ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
கடந்த 2014ல் நிவின்பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‛ஓம் சாந்தி ஒசானா' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். அதைத் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிய இவர் முழு நேர நடிகராகவும் மாறிவிட்டார். இந்த நிலையில் கடந்த 2023ல் இவரது இயக்கத்தில் வெளியான ‛2018' என்கிற படம் மிகப்பெரிய வெற்றியைப் பற்றி 200 கோடிக்கு மேல் வசூலித்தது.
கேரளாவில் கடந்த 2018ம் வருடத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ள சேதம் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை மையப்படுத்தி உண்மைக்கு நெருக்கமாக இந்த படத்தை இயக்கியிருந்தார் ஜூட் ஆண்டனி ஜோசப். இந்த நிலையில் அடுத்ததாகவும் இதே போன்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 1979ல் கோவாவில் இருந்து ஜெர்மனிக்கு சரக்குகளை ஏற்றுக்கொண்டு 51 பணியாளர்களுடன் கிளம்பிய சரக்கு கப்பல் திடீரென மாயமாக மறைந்தது. அதன்பிறகு அது குறித்த மர்மம் தற்போது வரை விலகவில்லை. இந்த கப்பலில் பயணித்து உயிரிழந்த கேரளாவை சேர்ந்த கப்பல் கேப்டன் மரியதாஸ் ஜோசப்பின் மகனான தாமஸ் ஜோசப் என்பவர் இந்த கப்பல் மாயமானதன் பின்னணியில் இருக்கும் விஷயங்களை எல்லாம் நன்கு ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஜூட் ஆண்டனி ஜோசப். இந்த கதை உருவாக்கத்தில் இவருடன் அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் ரைட் மற்றும் பத்திரிக்கையாளர் ஜோஷி ஜோசப் ஆகியோரும் இணைந்துள்ளனர்.