தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
கடந்த ஆண்டில் மலையாளத்தில் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த '2018' திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. கேரளாவில் பெய்த பெரும் வெள்ளத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயுக்கி இருந்தார். இதையடுத்து இவர் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் படம் இயக்குவதாக அறிவித்தனர். மேலும், ஜூட் ஜோசப் ஆண்டனி அடுத்து விக்ரம், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்போது நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் உடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.