பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

தெலுங்கு திரையுலகில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முக்கிய நடிகர் மகேஷ் பாபு. பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனாக, ஒரு வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தனது திறமையால் முன்னணி இடத்திற்கு உயர்ந்தவர் மகேஷ்பாபு. குறிப்பாக இப்போது வரை ஆக்சன் ரூட்டை விட்டு நகராமல் தொடர்ந்து அதில் பயணித்து வருகிறார். அவரது 39வது படமாக தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்று அவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை தொட்டுள்ளார். வயது தான் 50 ஆகிறதே தவிர நாளுக்கு நாள் ஒரு கல்லூரி மாணவரின் தோற்றத்திற்கே மாறிக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு குறித்து தனது பிறந்த நாள் வாழ்த்துத் செய்தியில் அதே கருத்தை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி இது குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நீங்கள் தெலுங்கு சினிமாவின் பெருமை. எல்லைகளுக்கு அப்பால் வெற்றிகளை பெற தீர்மானிக்கப்பட்டவர். ஒவ்வொரு வருடமும் கடந்து செல்லும்போது இன்னும் இளமையாகிக் கொண்டு செல்கிறீர்கள். இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான ஒன்றாக அமையட்டும்” என்று வாழ்த்தி உள்ளார்.
நடிகர் ஜூனியர் என்டிஆரும் வாழ்த்தும்போது, “பிறந்தநாள் வாழ்த்துகள் மகேஷ் பாபு அண்ணா.. உங்களது வெற்றிக்காக அன்புடன் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும் மகேஷ் பாபு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




