அஜித்துக்கு என்னாச்சு : இப்படி மாறிட்டாரே? | போதைப் பொருள் வழக்கு : தமிழ்த் திரையுலகில் பரபரப்பு… | சுரேஷ் கோபி பட டைட்டிலை சென்சார் மாற்ற சொன்னதன் காரணம் இதுதான் | ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்ருதிஹாசனின் எக்ஸ் கணக்கு | கிச்சா சுதீப்பின் பேச்சுக்கு கர்நாடக துணை முதல்வர் பதில் | ‛பேட்ரியாட்' டைட்டிலை உறுதி செய்த மோகன்லால் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது : நீதிமன்றத்தில் கேரள போலீஸார் மனு | குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன் : போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர் | திருக்குறள் படத்தை முதல்வர் பார்ப்பாரா? | நியூயார்க் திரைப்பட விழாவில் அங்கம்மாளுக்கு கவுரவம் |
மலையாள சினிமாவில் குணசித்ர நடிகராக அறியப்பட்டவர் விஷ்ணு பிரசாத். அண்ணன், தம்பி, மாதிரியான கேரக்டர்களில் நடித்து வந்தார். மாம்பழ காலம், ரன்வே, பென் ஜான்சன், பதாகா, மராத்தானாடு உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் 'காசி' என்ற படத்தில் நடித்தார்.
48 வயதான விஷ்ணு பிரசாத் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவரது மகள் தனது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தார். மேலும் குடும்பத்தினர் மருத்துவ செலவிற்காக ரூ.30 லட்சம் பணத்தையும் ரெடி பண்ணி வந்தனர்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு முன்பே விஷ்ணு பிரசாத் சிகிச்சை பலனின்றி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். பணம் புரட்ட தாமதம் ஆனதால் அவர் இறந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.