அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
கடந்த சில வருடங்களாகவே தென் இந்தியாவில் வெளியாகும் பல திரைப்படங்கள், பாலிவுட்டின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. பல பாலிவுட் இயக்குனர்கள், ஹீரோக்கள் தென்னிந்திய படங்களை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அனுராக் காஷ்யப் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதையே பெரிய பாக்கியம் என்பது போன்று பேசி வருகிறார்கள். கடந்த வருடம் 'லாப்பட்டா லேடீஸ்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் சிறப்புகள் குறித்து பேசிய அவர், அதே சமயம் தென்னிந்திய சினிமாவையும் பாலிவுட்டையும் ஒப்பிட முடியாது என்றும் கூறினார்.
“தென்னிந்திய படங்கள் குறிப்பாக மலையாளத்தில் வெளியாகும் படங்கள் கதைக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து, மேலும் பல பரிசோதனை முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதிலும் மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படம் ஒரு ஹாரர் படமாக சொல்லப்பட்ட விதமும் அதில் மம்முட்டியின் நடிப்பும் ரொம்பவே பிரமிக்க வைத்தது. அதே சமயம் தென்னிந்திய படங்கள், அவர்களது ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சமைத்து கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் அப்படி அல்ல.. அதன் எல்லை ரொம்பவே பெரியது” என்று கூறியுள்ளார்.