டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

முன்னணி மலையாள நடிகர் கே.ஆர்.ஜெயச்சந்திரன் மீது சமீபத்தில் மிக கொடுமையான பாலியல் புகார் அளிக்கப்பட்டது. தனது உறவுக்காரின் 4 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த சிறுமியின் தந்தை கசாபா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜெயச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோழிக்கோடு செசன்ஸ் கோர்ட்டில் ஜெயச்சந்திரன் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது, இதையடுத்து ஜெயச்சந்திரனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்கிடையில் அவர் தலைமறைவாகிவிட்ட தகவல் போலீசுக்கு கிடைத்தது.
ஜெயச்சந்திரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். அதனை விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கும்படியும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.