ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
முன்னணி மலையாள நடிகர் கே.ஆர்.ஜெயச்சந்திரன் மீது சமீபத்தில் மிக கொடுமையான பாலியல் புகார் அளிக்கப்பட்டது. தனது உறவுக்காரின் 4 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த சிறுமியின் தந்தை கசாபா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜெயச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோழிக்கோடு செசன்ஸ் கோர்ட்டில் ஜெயச்சந்திரன் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது, இதையடுத்து ஜெயச்சந்திரனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்கிடையில் அவர் தலைமறைவாகிவிட்ட தகவல் போலீசுக்கு கிடைத்தது.
ஜெயச்சந்திரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். அதனை விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கும்படியும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.