பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் மோகன்லாலின் 'பரோஸ்' திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அவரே முதல் முறையாக இயக்கியிருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற தவறியது. அவரது அடுத்த படமான தொடரும் திரைப்படம் வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் மோகன்லால்.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் செங்கனூர் பகுதியில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மும்பை படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வந்து கலந்து கொண்டுள்ளார் மோகன்லால். ஆச்சரியமாக இந்த நிகழ்வில் கேரள திரைப்பட மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் கலந்து கொண்டதோடு, மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டியும் எடுத்திருக்கிறார். ஒரு அமைச்சர் ஒரு நடிகரை பேட்டி எடுப்பது என்பது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும்.
இந்த பேட்டி எடுத்தது குறித்து அமைச்சர் ஷாஜி செரியன் கூறும்போது, “மும்பை படப்பிடிப்பில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே கிளம்பி வந்தார் மோகன்லால். அவர் வந்ததால் இந்த நிகழ்ச்சியே களைகட்டியது. அனைவரும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் என்னுடைய ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக நிதானமாக பதில் அளித்தார். என் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பரான ஒருவரை பற்றி கேட்ட சில ட்ரிக்கான கேள்விகளுக்கு கூட புத்திசாலித்தனமாக, எச்சரிக்கையாக பதில் அளித்தார்” என்று கூறியுள்ளார்.