டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த தொடர் வெற்றி இயக்குனர் ராஜமவுலியை ஒரு பான் இந்தியா இயக்குனராக மாற்றியதுடன் அவரது படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது. அதை தொடர்ந்து வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு படத்தை இயக்குவதற்கான முன்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பொதுவாகவே ராஜமவுலி இயக்கும் படங்கள் குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எடுத்துக் கொள்ளும் என்பதைத்தான் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ராம்சரணின் கேம் சேஞ்சர் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ராஜமவுலி கலந்து கொண்டபோது ராம்சரண் தான் கணித்துள்ள ஒரு விஷயம் பற்றி கூறினார். அதாவது இனி புதிதாக கோவிட் போன்ற எந்த ஒரு புதிய இயற்கை பாதிப்பும் ஏற்படாவிட்டால் நிச்சயமாக ஒன்றரை வருடங்களில் ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸுக்கு வந்துவிடும் அவருடன் பணியாற்றிய வகையில் நான் இதை கணித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் இதே சங்கராந்தி பண்டிகைக்கு மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் இந்த வருடம் மகேஷ்பாபுவுக்கு ரிலீஸ் ஆகும் விதமாக எந்த படமும் இல்லை. ராஜமவுலியன் படம் தான் அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு வெளியாக இருக்கும் படம். அந்த வகையில் அடுத்த வருடம் இந்த படம் வெளியாகி விடும் என ராம்சரண் கூறியிருப்பது மகேஷ்பாபு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.




