சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட மற்ற தினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குழந்தைகள் தினத்திற்கு பெரிதாக கொடுப்பதில்லை. இந்த நிலையில் நடிகர் மம்முட்டி மூன்று குழந்தைகளுடன் இன்று குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்று குழந்தைகளுடன் அவர் செல்பி எடுக்க முயற்சிப்பது போலவும் அவர்கள் அதை ஆர்வமாக பார்ப்பது போலவும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.