தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிறையில் அவருக்கு முறைகேடாக பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வெளியானதை அடுத்து கடந்த மாதம் பெல்லாரியில் உள்ள சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமினுக்காக விண்ணப்பித்துள்ளார் தர்ஷன். இந்த நிலையில் சிறையில் தர்ஷன் கடுமையான முதுகு வலியால் அவதிப்படுவதாகவும் இன்னொருத்தர் உதவியுடன் தான் நிற்கவும் நடக்கவும் முடிகிறது என்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டால், தன்னை மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என தர்ஷன் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.