25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மலையாள நடிகர் விநாயகன் ஏற்கனவே தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் கடந்த வருடம் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அவரது வர்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனாலும் அவரது குணாதிசயங்களாலும் பிரச்னைக்குரிய செயல்பாடுகளாலும் பெரிய அளவில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இந்த நிலையில் தற்போது கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் விநாயகன். மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மம்முட்டி வில்லனாக முக்கிய வேடத்தில் இருக்கிறார் என்பது தான் இதில் ஆச்சரியமான செய்தி.
அது மட்டுமல்ல இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மம்முட்டியும் இந்த படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பில் இணைந்துள்ளார். விநாயகனும் அவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.