கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! |
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. இந்த நிலையில் தெலுங்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர்டிஐ என்கிற படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி.
இந்த படத்தில் அவர் ஒரு மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரது தந்தையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவிசங்கருடன் ஒரு தற்கொலை வழக்கு சம்பந்தமாக நேருக்கு நேர் மோதுவது தான் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவே ஈடி.வி.வின் சேனலின் ஓடிடி தளத்தில் நேற்று (செப் 26) முதல் ஒளிபரப்பாகி உள்ளது.