டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் பஹத் பாசில் தற்போது மலையாள திரையுலகையும் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக தமிழில் விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்துள்ள வேட்டையன் மற்றும் தெலுங்கில் அவர் நடித்துள்ள புஷ்பா 2 ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் தனது சில தினங்களுக்கு முன்பு பஹத் பாசில் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார், திரை உலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சற்று தாமதமாக நான்கு நாட்கள் கழித்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் மோகன்லால். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பஹத் பாசில் தனது கன்னத்தில் வாஞ்சையுடன் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள மோகன்லால், ஆவேசம் படத்தில் பஹத் பாசில் பேசும் வசனமான எடா மோனே என்கிற வசனத்தையும் குறிப்பிட்டு ஐ லவ் யூ என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.




