மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மலையாளத்தில் சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட முன்னணி நடிகர் மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக மாறி பரோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். மைடியர் குட்டி சாத்தான் படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் பரோஸ் என்கிற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மோகன்லால்.
இது வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த காலத்தில் அவர் சம்பாதித்த சொத்துக்களை சேர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனி வாழ் இந்தியரும், கேரளாவை சேர்ந்த மலையாள எழுத்தாளரான ஜார்ஜ் துண்டிப்பரம்பில் என்பவர், இந்த படத்தின் கதை தான் எழுதிய நாவலின் காட்சிகளை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இந்தக் கதை இந்த படத்தின் கதாசிரியரான ஜிஜோ பொன்னூஸ் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தற்போது குற்றம் சாட்டியுள்ள ஜார்ஜ் துண்டிப்பாரம்பில் 2009ல் தான் எழுதிய மாயா என்கிற நாவலை தழுவி, அதில் எழுதப்பட்டுள்ள கப்பிரி முத்தப்பன் என்கிற கதாபாத்திரத்தை அப்படியே இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். படம் வெளியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட இந்த பரோஸ் திரைப்படம், இந்த புதிய பிரச்சினையை சரி செய்து குறித்த தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.